இயக்குனர் கார்த்திக் நரேன், கதாபாத்திர தேர்வில் கச்சிதம் காட்டிய இவர், திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். துருவங்கள் பதினாறு படத்தை எடுத்தவரா இவர் என கேட்கும் அளவுக்கு இப்படத்தின் கதை உள்ளது. தனுஷ் போன்ற அசுரத்தனமான நடிகரை சரிவர பயன்படுத்தாது ஏன் என்ற கேள்வி தான் கேட்க தோன்றுகிறது.