ரசிகர்கள் பற்றி தனுஷ்
இந்த நிகழ்ச்சியில் இறுதியாக பேசிய தனுஷ், சிறுதுளி பெருவெள்ளம்னு சொல்வாங்க. நான் 2002-ல இருந்து சேர்ந்த சிறு துளியெல்லாம் இன்னைக்கு பெருவெள்ளமா வந்திருக்கு. இதுதான் நான் சேர்த்த சொத்து என தன் மீது அன்பு செலுத்தும் ரசிகர்களை சுட்டிக்காட்டி பேசினார். தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தை பற்றி பேசிய அவர், இந்த படத்தை பற்றி நினைச்சாலே முதலில் நினைவுக்கு வருவது உழைப்பு தான். ஒரு அசுரத்தனமான உழைப்பு இந்த படத்துல இருக்கு என கூறினார்.