நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது உருவாக உள்ள திரைப்படம் எஸ்.டி.ஆர்.48. சிம்புவின் 48-வது படமான இதனை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
24
எஸ்.டி.ஆர் 48 படத்திற்கு தயாராவதற்காக தாய்லாந்து சென்றிருந்த நடிகர் சிம்பு, அங்கு இரு மாதங்கள் தங்கி மார்ஷியல் ஆர்ட்ஸ், உள்ளிட்ட கலைகளை கற்றுக்கொண்டார். பின்னர் அண்மையில் லண்டன் சென்று அங்கும் சில பயிற்சிகளை மேற்கொண்டதாக கூறப்பட்டது. இது வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக உருவாக உள்ளதாம். நடிகர் சிம்பு நடிக்கும் முதல் வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.
எஸ்.டி.ஆர்.48 படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும், அப்படத்தின் ஷூட்டிங் எப்போது துவங்கும் என்கிற தகவலை வெளியிடாமல் இருந்து வந்தனர். அதன்படி இப்படத்தின் ஷூட்டிங் வருகிற ஆகஸ்ட் மாதம் தான் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளுக்கு அதிக நாட்கள் தேவைப்படுவதால், ஷூட்டிங்கை ஆகஸ்ட் மாதம் தொடங்கும் ஐடியாவில் உள்ளார் தேசிங்கு பெரியசாமி.
44
இந்த அப்டேட் உடன் நடிகர் கமல்ஹாசனை சந்தித்த இயக்குனர் தேசிங்கு பெரியசாமி மற்றும் சிம்பு ஆகியோர் அவருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, எஸ்.டி.ஆர் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி செம்ம வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.