தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் நடிப்பில் உருவாகி உள்ள புதிய திரைப்படம் தாதா. இப்படத்தில் நிதின் சத்யா உடன் இணைந்து நடித்துள்ளார் யோகிபாபு. இப்படத்தை கின்ன்ஸ் கிஷோர் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது.
24
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் ரிலீஸ் செய்யப்பட்டு இருந்தது. அதில் யோகிபாபுவின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. இதையடுத்து இந்த படத்தில் தான் 4 சீனில் தான் நடித்ததாகவும், தயவு செய்து தன்னை வைத்து விளம்பரம் செய்ய வேண்டாம் எனவும் டுவிட்டர் வாயிலாக தெரிவித்து இருந்தார் யோகிபாபு.
இந்நிலையில், யோகிபாபுவின் இந்த செயலுக்கு தாதா திரைப்படத்தின் இயக்குனர் கிஷோர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குனர் கின்னஸ் கிஷோர், யோகிபாபு திரைப்படத்தில் நடிக்க தடைவிதிக்க வேண்டும் என கூறினார்.
44
மேலும் அவர் பேசியதாவது : தாதா திரைப்படத்தில் நடிக்கவில்லை என யோகிபாபு டுவீட் செய்தாலும், அதுகுறித்து கவலையில்லை. தாதா படத்தை எந்த தயாரிப்பாளரும் வாங்கவிடாமல் தடுத்ததால், யோகிபாபு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாக இயக்குனர் கிஷோர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி தனது தயாரிப்பில் வேறு ஒரு படத்தில் நடிக்க யோகிபாபு அட்வான்ஸ் வாங்கி உள்ளதாகவும், ஆனால் நடித்து கொடுக்கவில்லை என்றும் தெரிவித்த கிஷோர், என்னுடையை படத்தை வியாபாரம் செய்ய விடாமல் தடுத்ததற்காக அவரை எந்த படத்திலும் நடிக்கவிடக் கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாக கிஷோர் தெரிவித்துள்ளார். யோகிபாபு - தாதா படக்குழு இடையேயான பிரச்சனை கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.