இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி குறித்த ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பின் அவரின் மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்துள்ளது. அவர் நடிப்பில் அடுத்ததாக ரிலீசாக இருக்கும் அகிலன் திரைப்படத்தை முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று, ரூ.30 கோடிக்கு வாங்கி உள்ளது. அவர் சோலோ ஹீரோவாக நடித்த படங்களில் அதிக தொகைக்கு விற்பனையான படம் இதுவாகும்.