இதனை அடுத்து இயக்குனர் செந்தில் செல்அம் தான், தன்னை ஏமாற்றி விட்டதாகவும். ஷூட்டிங்கிற்கு எப்போது வர வேண்டும் என்று அழைத்து கேட்டால், அவருடைய தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வராது. பிறகு நான் எப்படி சென்று நடிப்பது என்ற ஒரு கேள்வியை அவர் முன் வைத்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய இயக்குனர் செந்தில் செல்அம். "அவன் எப்போது அரஸ்டாகி எங்கே இருக்கிறான் என்பதே எனக்கு தெரியாது. பிறகு அவனை வைத்து நான் எப்படி படம் எடுப்பது" என்று கேள்வியை எழுப்பி பதில் தாக்குதலை கொடுத்திருந்தார். இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு பிரபல திரைப்பட நடிகர் கூல் சுரேஷ், மஞ்சள் வீரன் திரைப்படத்தில் நாயகனாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது.