தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. ரெட் கார்டு கொடுக்கப்பட்டதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு, கடந்த ஆண்டு அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்ட பின்னர் தான் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அந்த வகையில் அவர் நடிப்பில் கடந்தாண்டு இறுதியில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வெளியானது.
24
லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தை சுராஜ் இயக்கி இருந்தார். இப்படத்தில் வடிவேலு உடன் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், மாறன், குக் வித் கோமாளி ஷிவாங்கி என மிகப்பெரிய காமெடி பட்டாளமே நடித்திருந்தது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் தோல்வி குறித்து வடிவேலு உடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ள நகைச்சுவை நடிகர் முத்துக்காளை பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் பேசியதாவது : “நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் தோல்வி அடைந்ததை பார்க்கும்போது விதி தன் வேலையை கரெக்டா தான் செஞ்சிருக்குனு நினைக்க தோன்றுகிறது.
நான் வடிவேலு உடன் படங்களில் நடித்தபோதெல்லாம், அவர் நன்றாக வர வேண்டும், அந்த காமெடி பேசப்பட வேண்டும் என்று தான் நடிப்போம். ஆனால் இப்போ உள்ள நடிகர்கள் எல்லாம் தான் நன்றாக வரணும் அப்படிங்குற எண்ணத்தில் தான் வடிவேலு உடன் நடித்தார்கள். அதுவே அப்படத்தின் தோல்விக்கு காரணம்.
44
நாம நடிச்சதை தான் மக்கள் பார்க்கணும் அப்படிங்குற கட்டாயம் கிடையாது. பிடிக்கவில்லை என்றால் யாராக இருந்தாலும், எவ்ளோ பெரிய ஆளாக இருந்தாலும் தூக்கி எறியக்கூடிய மனநிலையில் தான் மக்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் நல்ல படங்கள் வந்தால் அதனை ரசிக்கிறார்கள்” என முத்துக்காளை கூறி உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.