சென்னையில் த்ரிஷா வீட்டை வாங்கியது யார் தெரியுமா? "அந்த" கிளாசிக் தமிழ் நடிகர் தானாம்!

First Published Sep 12, 2024, 10:02 PM IST

Trisha Chennai House : பிரபல நடிகை த்ரிஷா, சென்னையில் தான் வசித்து வந்த சொகுசு பங்களாவை பிரபல கிளாசிக் தமிழ் நடிகருக்கு விற்றுள்ளார்.

Trisha chennai house

த்ரிஷா 

தமிழ் சினிமாவை பொறுத்தவரை இன்று மிகப்பெரிய நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் திரிஷா. கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும், இப்போது மாஸாக ஒரு கம் பேக் கொடுத்து, தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக தளபதி விஜயின் "லியோ" திரைப்படத்தில் நடித்திருந்த அவர், இப்போது தல அஜித்துடன் "விடாமுயற்சி" திரைப்படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமில்லாமல் தொடர்ச்சியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வருகின்ற அஜித்தின் "குட் பேட் அக்லி" திரைப்படத்திலும் திரிஷா தான் அஜித்தின் நாயகியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!

Actress Trisha

சுமார் 25 ஆண்டுகளாக இந்திய திரை உலகில் பயணித்து வரும் நடிகை திரிஷா, ஒரு திரைப்படத்திற்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார். அது மட்டுமல்லாமல் விறுவிறுப்பாக உருவாகி வரும் கமல்ஹாசனின் "தக் லைஃப்" திரைப்படத்தில் நடிக்க நடிகை திரிஷா சுமார் 12 கோடி சம்பளமாக வாங்கியதாகவும் சில தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் பிரபல நடிகை திரிஷா, சென்னையில் தான் வசித்து வந்த வீட்டை காலி செய்துவிட்டு இப்போது வேறொரு இடத்திற்கு குடி பெயர்ந்ததாக கூறப்படுகிறது.

மேலும் திரிஷா இதுவரை வசித்து வந்த அந்த வீட்டை பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகர், பெருந்தொகைக்கு வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அண்மையில் அந்த நடிகர் கொடுத்த ஒரு பேட்டியும் இப்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

Latest Videos


Bhanu chander

ஆந்திராவில் பிறந்து தெலுங்கு மொழி திரைப்படங்கள் மூலம் கலை உலகில் அறிமுகமானவர் தான் பானு சந்தர். தமிழில் கடந்த 1980ம் ஆண்டு பிரபல இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான "மூடுபனி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். தமிழைப் பொறுத்தவரை குறைந்த அளவிலான திரைப்படங்கள் தான் நடித்திருக்கிறார் என்ற பொழுதும், நல்ல பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து மக்கள் மத்தியில் காதல் நாயகனாக வளம் வந்தவர் பானு சந்தர். இறுதியாக தமிழில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான பிரபல நடிகர் அருண் விஜயின் "ஓ மை டாக்" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். 

தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகள் மட்டுமல்லாமல் பல தமிழ் தொலைக்காட்சி சீரியல்களிலும் இவர் நடித்து அசத்தியிருக்கிறார். இப்போது 72 வயதாகும் பாலச்சந்தர் கடந்த 45 ஆண்டுகளாக இந்திய திரை உலகில் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Actor Bhanu chander

அவர் தான் இப்போது நடிகை திரிஷா வசித்து வந்த அவரது சென்னை வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார். அண்மையில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், அந்த வீட்டை மிகவும் அழகாக தானும், தனது மனைவியும் பராமரித்து வருவதாகவும், வீட்டுக்குள் நுழைந்த உடனேயே ஒரு மினி பார் செட்டப் வைத்துள்ளதாகவும் கூறினார். ஆனால் அது ஒரு அழகு பொருளாக தான் அமைத்துள்ளேன், காரணம் நான் குடிப்பழக்கத்தை விட்டு சுமார் 20 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றார் அவர். 

மேலும் நீங்கள் இந்த வீட்டை சுற்றி பார்க்கும் பச்சை பசேலன இருக்கும் அனைத்து செடிகளையும் நட்டது என் மனைவி தான். அவருக்கு செடிகள் மீது நிரம்ப ஆர்வம் உண்டு என்று கூறியிருக்கிறார். தன்னுடைய இளைய மகன் டாக்டர் பட்டம் பெற்று விட்டதாகவும், தன்னுடைய மூத்த மகன் தற்பொழுது தெலுங்கு திரையுலகில் இரண்டு திரைப்படங்களில் நடித்திருப்பதாகவும் பானு சந்தர் கூறியுள்ளார். 

பாத்திமா பாபுவை மிரட்டியது யார்? திருமண வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?

click me!