தமிழ் சினிமாவில் ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்குள் தயாரிப்பாளர்கள் பல கஷ்டங்களையும், நிதி நெருக்கடிகளையும் சந்திக்க நேரிடுகிறது. அந்த சமயத்தில், அன்புசெழியன் போன்றவர்கள் தான் மிகக் குறைந்த வட்டிக்கு பணம் கொடுத்து தயாரிப்பாளர்களுக்கு பேர் உதவியாக இருந்து வருகின்றனர். இருப்பினும், அன்புசெழியனிடம் பல பேர் உதவி பெற்று, பின்னர் பணம் கொடுக்க முடியாத சூழல் காரணமாக ஏமாற்றி உள்ளனர். இப்படி தயாரிப்பாளர்கள் பல கஷ்டங்களை அனுபவித்து வரும் நிலையில் வருமான வரித்துறையினர், அடுத்தடுத்து தயாரிப்பாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்கு உதவியாக இருப்பவர்கள் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடத்துவது சரியல்ல என கே.ராஜன் தெரிவித்துள்ளார்.