மணிரத்தினம் இயக்கிய மாஸ்டர் பீஸ் படங்களில் பாம்பேவும் ஒன்று. அந்தப் படத்தில் நாயகனாக நடிக்க முதலில் கமிட்டானது விக்ரம் தான். அவரை வைத்து ஒரு சில காட்சிகள் படமாக்கிய பின்னர், தாடியை எடுக்குமாறு மணிரத்தினம் சொன்னாராம். ஆனால் வேறு ஒரு படத்திற்காக அந்த தாடியை வளர்த்து வந்ததால் அதை எடுக்க மறுத்ததோடு மட்டுமின்றி பாம்பே படத்திலிருந்தும் விலகிவிட்டார் விக்ரம்.