அதில் அவர் பதிவிட்டிருப்பதாவது : “என் மனைவி 10 மாத குழந்தையுடன் கிளாஸ்கோவில் இருந்து சென்னைக்கு பயணம் மேற்கொண்டார். தனியாக வந்த அவர் லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில் அஜித்தை சந்தித்ததும் அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அப்போது என் மனைவி கைக்குழந்தையை வைத்துக்கொண்டு லக்கேஜையும் சுமந்து வந்ததை பார்த்த அஜித், அவரது லக்கேஜையும் தான் எடுத்து வருவதாக கூறி உதவியுள்ளார்.
என் மனைவி வேண்டாம் என சொல்லியும், இருக்கட்டும் மா எனக்கும் 2 குழந்தைங்க இருக்காங்க. அதனால் உங்களோட சூழ்நிலையை என்னால் உணர முடிகிறது எனக்கூறி எடுத்து வந்தாராம். அதோடு மட்டுமல்லாம் அந்த லக்கேஜ் என் மனைவியின் இருக்கையின் மேல் வைக்கப்பட்டதா என்பதை உறுதி செய்தபின்னர் தான் அங்கிருந்து சென்றுள்ளார் அஜித். அஜித்துடன் வந்த நபர் தலைவா நான் எடுத்துட்டு வரேன் என கேட்டும் அதை மறுத்துவிட்டாராம் ஏகே. மிகப்பெரிய ஆளுமை கொண்ட ஒரு நட்சத்திரம் இப்படி நடந்துகொண்டது தன்னை வியக்க வைத்தது” என அந்த பெண்ணின் கணவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு அஜித்துக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... அதென்ன ‘கங்குவா’..? சூர்யா 42 படத்தின் வித்தியாசமான தலைப்புக்கு இப்படி ஒரு அர்த்தமா..!