விஜே சித்ரா தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பம்... முதல்வர் வரை சென்ற விவகாரம்... தாயாரின் திடீர் கோரிக்கை!

First Published Dec 30, 2020, 2:16 PM IST

வழக்கு விசாரணை நிறைவு பெற்று போலீசாரிடம் அறிக்கை சமர்ப்பிக்க தயாராக இருந்த நிலையில், சித்ராவின் தாயார் முதல்வர் வரை கொடுத்துள்ள மனு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 
 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளைக் கொண்ட விஜே சித்ரா, கடந்த 9ம் தேதி பூந்தமல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
undefined
சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் ஹேம்நாத்திற்கும், சித்ராவிற்கும் இடையே கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் நடத்திருந்ததால் ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
undefined
இதனிடையே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். கடந்த 14ம் தேதி சித்ராவின் தற்கொலை குறித்து ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ விசாரணையை தொடங்கினார்.
undefined
முதற்கட்டமாக சித்ராவின் குடும்பத்தினரிடமும், அதன் பின்னர் கணவர் ஹேமந்த், மாமனார், மாமியார், சக நடிகர், நடிகைகள், நெருங்கிய நண்பர்கள், ஓட்டல் ஊழியர்கள், உதவியாளர் ஆனந்த் என பலரிடமும் நடைபெற்ற விசாரணை, கடந்த 24ம் தேதி நிறைவடைந்தது.
undefined
சித்ராவின் மரணம் தொடர்பான அறிக்கையை காவல்துறையிடம் சமர்ப்பிப்பதற்காக கோட்டாட்சியர் தயாரித்து வந்தார். இந்நிலையில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் சித்ராவின் தாயார் கொடுத்துள்ள மனு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
undefined
சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கை காவல்துறையினர் முறையாக விசாரிக்கவில்லை என குற்றச்சாட்டியுள்ள அவருடைய தாயார் விஜயா. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
undefined
வழக்கு விசாரணை நிறைவு பெற்று போலீசாரிடம் அறிக்கை சமர்ப்பிக்க தயாராக இருந்த நிலையில், சித்ராவின் தாயார் முதல்வர் வரை கொடுத்துள்ள மனு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
undefined
click me!