அபாண்டமாக பழி போடப்பட்டு... ஹேமந்த்தால் அடித்து துரத்தப்பட்ட சித்ராவின் உதவியாளர்! பகீர் பின்னணி

First Published Dec 30, 2020, 2:08 PM IST

கடந்த நான்கு மாதமாக சித்ராவின் உதவியாளராக ஆனந்த் என்பவர் இருக்கிறார். இவருக்கு முன் சித்ராவிடம் சலீம் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் பிரபல ஊடகம் ஒன்றிக்கு போன் மூலம் அளித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளைக் கொண்ட விஜே சித்ரா, கடந்த 9ம் தேதி பூந்தமல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
undefined
சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் ஹேம்நாத்திற்கும், சித்ராவிற்கும் இடையே கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் நடத்திருந்ததால் ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
undefined
இதனிடையே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். கடந்த 14ம் தேதி சித்ராவின் தற்கொலை குறித்து ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ விசாரணையை தொடங்கினார்.
undefined
முதற்கட்டமாக சித்ராவின் குடும்பத்தினரிடமும், அதன் பின்னர் கணவர் ஹேமந்த், மாமனார், மாமியார், சக நடிகர், நடிகைகள், நெருங்கிய நண்பர்கள், ஓட்டல் ஊழியர்கள் என பலரிடமும் விசாரணை நடைபெற்றது.
undefined
இறுதியாக சித்ராவின் உதவியாளரான ஆனந்திடம் ஒருமணி நேரம் விசாரணை நடைபெற்றது. அத்துடன் ஆர்.டி.ஓ.விசாரணை நிறைவு பெற்று, 250 பக்க அறிக்கை ஒன்றும் தயார் செய்யப்பட்டது.
undefined
இந்நிலையில் சித்ராவின் தற்கொலை குறித்து இவரிடம் சுமார் இரண்டரை வருடமாக உதவியாளராக வேலை செய்த சலீம் என்பவர் பிரபல ஊடகம் ஒன்றில் போன் மூலம் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
undefined
அதில் முக்கியமாக சித்ராவிடம் இரண்டு வருடங்களுக்கு மேலாக வேலை செய்த தன்னை, வீண் பழி போட்டு ஹேமந்த் வேலையை விட்டு நிறுத்தியதாகவும், சித்ராவிற்கு இதில் உடன் பாடு இல்லை என்றாலும்... அவரை மீறி எதுவும் செய்யமுடியாது என்பதால் தன்னை வேலையை விட்டு நிறுத்தியதாக கூறியுள்ளார்.
undefined
சித்ரா உள்ளூரில் எந்த ஈவென்ட் , போட்டோ ஷூட் மற்றும் சீரியல்கள் நடிக்கும் போது, அதனை சித்ராவின் அனுமதியோடு வீடியோ எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதுபோல் எடுத்த வீடியோக்களை சித்ராவிற்காக உள்ள ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
undefined
சித்ரா பல முறை தன்னுடைய வீடியோவை சலீமிடம் இருந்து கூட வாங்கி போஸ்ட் செய்வார். சலீம் இப்படி வீடியோ எடுப்பதை சித்ரா ஒரு நாள் கூட பெரிதாக கண்டு கொண்டதே இல்லை.
undefined
ஆனால் ஹேமந்த் சலீமை வெளியேற்றவேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்ததால், திடீர் என சித்ராவை ஆபாசமாக வீடியோ எடுக்கிறார் என அவர் மீது பழி போட்டு, அவரை அடித்து வேலையை விட்டு அனுப்பிவிட்டதாக பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
undefined
click me!