டபுள் மினிங்ல பாட்டெழுதுவதில் தான் ஒரு கில்லாடி என்பதை காக்கிசட்டை படத்தில் வரும் ‘சிங்காரி சரக்கு’ பாடலில் காட்டி இருப்பார் வாலி. அதில் வரும் ‘தின்னாலே ருசிக்குமடா இத சொல்லாத ஆளும் இல்ல’ என்கிற வரி ரொம்ப சிம்பிளா இருக்குன்னு தான் நினைக்குறீங்க. இது சென்சார் வெர்ஷனாம். முதலில் வாலி எழுதியது, ‘தின்னாலே ருசிக்குமடா இவ சூடான கீரை வடை’ என்ற வரிகள் தானாம். ஆனால் அதற்கு சென்சார் போர்டு கத்திரி போட்டுவிட்டது.
சாக்லேட் படத்தில் இடம்பெறும் ‘மலை மலை’ பாடல் மிகவும் பாப்புலர் ஆனது. இந்த பாடல் வரிகளை வாலி தான் எழுதி இருந்தார். இதன் முதல் வரியே சென்சாரில் சிக்கியது. வாலி, மலை மலை மலை மருதமலை என எழுத அதற்கு சென்சார் போர்டு கத்திரி போட்டதால் மலை மலை மலை மலை என மாறியது.
சரோஜா படத்திற்காக வாலி எழுதிய கோடான கோடி பாடலும் சென்சாரில் சிக்கிய பாடல் தான். இந்த பாடலில் பல்லவியில் வரும் ‘சிங்காரி நான் அழகு கொடி... நீ ஏத்து நம்ம வெற்றிக்கொடி’ என்ற வரிகள் சென்சார் வெர்ஷன் தான். அதற்கு முன்னர், ‘சிங்காரி நீ அழுத்திப்புடி.. கொடி ஏத்தி தூக்கிப்புடி’ என்கிற ஏடாகூடமான வரிகள் இருந்ததால் அதற்கு சென்சாரில் கத்திரி போட்டுள்ளனர்.