இந்தியர்களின் எட்டாக் கனியாக இருந்த ஆஸ்கர் விருதை, முதன்முதலில் தட்டிதூக்கி பெருமை சேர்த்தது தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்கிற ஆவணப்படம் தான். முழுக்க முழுக்க முதுமலையில் படமாக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தை கார்த்திகி கோன்சால்வஸ் என்பவர் இயக்கி இருந்தார். இந்த ஆவணப்படம் ஆஸ்கர் வென்றதற்கு முக்கிய காரணம், அதில் நடித்திருந்த பொம்மன் பெல்லி தம்பதி தான். அவர்களின் வாழ்க்கையை படமாக்கி தான் இந்த ஆவணப்படத்திற்காக ஆஸ்கர் வென்றுள்ளார் கார்த்திகி.