நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, கடந்த 2012-ம் ஆண்டு ரிலீஸ் ஆன 3 படம் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். அப்படம் பெரியளவில் வெற்றியடையாவிட்டாலும், அதில் உள்ள பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படத்தை இயக்கி இருந்தார். இப்படத்திற்கு பின் படங்கள் எதுவும் இயக்காமல் இருந்த ஐஸ்வர்யா தற்போது மீண்டும் இயக்குனராக ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார்.