சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, வாணி போஜன், பிரியா பவானி ஷங்கர் போன்ற நாயகிகள் வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது பிஸியான ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில், இவர்களை தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து அடுத்ததாக வெள்ளித்திரைக்கு வந்திருப்பவர் ஷிவானி நாராயணன் தான்.
தன்னுடைய 17 வயதிலேயே, சின்னத்திரை சீரியலில் அறிமுகமாகி ஹீரோயினாக மாறியவர் ஷிவானி. விஜய் டிவியில் நடித்த 'பகல் நிலவு' சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
பின்னர் சீரியலில் இருந்து விலகி வெள்ளித்திரை வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார்.
சுமார் 80 நாட்களுக்கும் மேலாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் இருந்தாலும், இவருடைய திறமைகள் பெரிய அளவில் வெளிப்படவில்லை என்பதே பலரது கருத்தாகவும் இருந்தது.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், அதீத கவர்ச்சியை குறைத்து கொண்டு... மிதமான கவர்ச்சியில் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது, கடற்கரையை சூடாகும் அளவிற்கு சேலை அழகில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் செம்ம வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
ஹாட் புகைப்படங்களை வெளியிட்டே பட வாய்ப்பை கைப்பற்ற பக்கா பிளான் போட்டு வரும், ஷிவானி... தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடித்து வரும் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.