Biggboss 5 Tamil: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து கன்ஃபாம்மா வெளியேறுவது இவரா? வெளியான ஷாக்கிங் தகவல்!

First Published Dec 24, 2021, 5:18 PM IST

கடந்த வாரம் பிக்பாஸ் (Biggboss Tamil 5) வீட்டை விட்டு, அபிநய் (Abinay) வெளியேறிய நிலையில், இந்த வாரம் குறைவான வாக்குகளுடன், வெளியேற உள்ள பிரபலம் குறித்த தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பல முறை நாமினேஷன் லிஸ்டில் இடம்பிடித்து, நூல் இழையில் தப்பிய போட்டியாளர் அபிநய் கடந்த வாரம் வெளியேறினார். பாவனியின் காதல் சர்ச்சையில், இவரது பெயர் அரசால் புரசலாக அடிபட்டாலும், மிகவும் எதார்த்தமாக பிக்பாஸ் விளையாட்டை விளையாடி வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

பட வாய்ப்புகளை கை பற்றும் முயற்சியோடு உள்ளே வந்த அபிநய்க்கு அவர் நினைத்தது போன்று பட வாய்ப்புகள் கிடைக்குமா என்பதும் இனி தான் தெரியவரும் .

இந்நிலையில் தற்போது 80 நாட்களை கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் , இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பதையும் கணித்துள்ளனர் நெட்டிசன்கள்.

இந்த வார நாமினேஷன் பட்டியலில், பிரியங்கா, பாவனி, நிரூப், அக்சரா, வருண் மற்றும் சிபி ஆகிய ஆறு பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் அக்ஷரா தான் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளாராம்.

எனவே, இந்த வாரம்... அக்ஷரா தான் வெளியேறுவார் என அடித்து கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள். அக்ஷராவை தொடர்ந்து, வருண் மற்றும் நிரூப் ஆகியோர் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல் இந்த வாரம் அதிக ஓட்டுகளை பெற்ற போட்டியாளராக பிரியங்கா உள்ளார் என்றும் அவரை அடுத்து பாவனி மற்றும் சிபி பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனவே கூறிட்டன வாக்குகளுடன் இந்த வாரம் அக்சரா ரெட்டி வெளியேற போவதாக வெளிவந்திருக்கும் தகவல் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!