இதையடுத்து தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த சரவணன், கடந்த 2019-ம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில், அவர் தான் இளம் வயதில் பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் செல்வேன் என பேசியது பெரும் சர்ச்சையானதை அடுத்து, அவரை பாதியிலேயே நிகழ்ச்சியை விட்டு அதிரடியாக வெளியேற்றினர். இது அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.