டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர் ஜிபி முத்து. ஒருகட்டத்தில் டிக்டாக் தடை செய்யப்பட்டது மட்டுமின்றி ஊரடங்கால் வறுமையில் வாடிய இவர் தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அதிலிருந்து மீண்டு வந்த ஜிபி முத்து, யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் தனக்கு வரும் கடிதங்களை படித்துக்காட்டி, அதன்மூலம் சம்பாதிக்க தொடங்கினார். வட்டார மொழியில் அவர் தனக்கு கடிதம் போடுபவர்களை திட்டும் வீடியோ இன்று மீம் டெம்பிளேட் ஆகும் அளவுக்கு பேமஸ் ஆனது.