பிக்பாஸ் பிரபலம் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்டு கொலை? சகோதரர் பரபரப்பு புகார்!

First Published Aug 24, 2022, 11:42 PM IST

திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்ததாக கூறப்பட்ட பிக்பாஸ் பிரபலம், பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அவரது சகோதரர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

இந்தியில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவே, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதனை, அந்தந்த திரையுலகில் முன்னணி நடிகர்களாக உள்ளவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதால், பிரபலங்களும் இதில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
 

இந்தி பிக்பாஸ் 14 -வது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர், நடிகையும், பாஜக பிரமுகருமான சோனாலி போகத். இந்நிலையில் இவர் ஆகஸ்ட் 22 ஆம் தேதி அன்று இரவு மாரடைப்பால் மரணமடைந்ததாக வெளியான தகவல்  பாலிவுட் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்: வாயில் டின்னுடன்... டீப் நெக் உடையில்... தொடை முழுவதையும் காட்டி.. உச்ச கவர்ச்சியில் ஷிவானி கொடுத்த கூல் போஸ்!
 

41 வயதே ஆன சோனாலி, நடிப்பை தொடர்ந்து... சமீப காலமாக பாஜக கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு அரியானாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். எனினும் தொடர்ந்து சில கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
 

இந்நிலையில் தொழில் ரீதியாக கோவா சென்றிருந்த நடிகை சோனாலி போகத்துக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவரது சகோதரர், ரிங்கு தக்க சோனாலி கொலை செய்யப்பதாக போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: ராஜு முருகன் இயக்கத்தில்... இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கும் கார்த்தி! வெளியான லேட்டஸ்ட் தகவல்!
 

இது குறித்து அவர் கொடுத்துள்ள புகாரில் தெரிவித்துள்ளதாவது. சோனாலி போகத்தை அவரது உதவியாளர்கள் 2 பேர் தான் கொலை செய்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். சோனாலியின் உதவியாளரான சுதிர் உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நிர்வாணமாக அவரை வீடியோ எடுத்ததாகவும் பிறகு அவரை பலாத்காரம் செய்து கொலை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் விரைவில் இந்த கொலை தொடர்மான மர்மங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!