பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சி 35 நாட்களை கடந்து வெற்றிநடைபோட்டு வருகிறது. பிக்பாஸ் சீசன் 8-ல் முதல் ஆளாக உள்ளே வந்த போட்டியாளர் ரவீந்தர் சந்திரசேகர், அவர் தான் முதல் ஆளாக எலிமினேட் ஆகி வெளியே சென்றார். அவருக்கு அடுத்தபடியாக அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா ஆகியோர் எலிமினேட் ஆகினர். இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்கிற தீமில் நடத்தப்படுகிறது.
24
Bigg Boss Tamil season 8 Contestants
இதனால் ஆண்கள் அணி ஒரு புறமும், பெண்கள் அணி ஒரு புறமும் பிரிக்கப்பட்டு தனித்தனியே தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இதற்கு முந்தைய சீசன்களைக் காட்டிலும் இந்த சீசன் செம்ம போர் ஆன சீசனாக உள்ளது. இதற்கு காரணம் இந்த பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் கான்செப்ட் தான். பெண்களும், ஆண்களும் சேர்ந்து விளையாடினால் தான் சுவாரஸ்யம் இருக்கும், இப்படி அவர்களை தனித்தனி அணிகளாக பிரித்துவிட்டால் அதில் சுத்தமாக சுவாரஸ்யமே இல்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
இப்படி டல் அடித்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தூக்கி நிறுத்த ஆறு வைல்டு கார்டு போட்டியாளர்களை உள்ளே அனுப்பினர். அதன்படி ரியா, ராணவ், ரயான், வர்ஷினி, மஞ்சரி, ஷிவக்குமார் ஆகிய 6 பேர் ஒரே நாளில் எண்ட்ரி கொடுத்தனர். வந்த வேகத்தில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் எல்லாம் கொடுத்த பட்டாசாய் எண்ட்ரி கொடுத்த வைல்டு கார்டு போட்டியாளர்கள் போகப் போக புஷ்வானம் போல் புஷ்சுனு போய்விட்டனர். இதனால் மீண்டும் மந்த நிலைக்கு சென்றுள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி.
44
Bigg Boss Tamil season 8 Wild Card Contestants salary
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்துள்ள 6 போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த விவரம் கசிந்துள்ளது. அதன்படி வைல்டு கார்டு போட்டியாளர்களிலேயே அதிக சம்பளம் வாங்குவது ரயான் தான். இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது. அடுத்தபடியாக ஷிவக்குமார், ராணவ் மற்றும் வர்ஷினி வெங்கட் ஆகியோருக்கு தலா ரூ.12 ஆயிரம் சம்பளம் ஒரு நாளைக்கு வழங்கப்படுகிறதாம். எஞ்சியுள்ள ரியா மற்றும் மஞ்சரி ஆகியோர் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.