மருத்துமனையில் யாஷிகா ஆனந்த் எப்படியிருக்கிறார்?... வெளியானது லேட்டஸ்ட் புகைப்படம்...!

Published : Aug 04, 2021, 05:34 PM IST

இன்று யாஷிகா ஆனந்தின் பிறந்தநாளை முன்னிட்டு சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்

PREV
17
மருத்துமனையில் யாஷிகா ஆனந்த் எப்படியிருக்கிறார்?... வெளியானது லேட்டஸ்ட் புகைப்படம்...!

கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் சமீபத்தில் தான் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டார். கடந்த ஜூலை 25ம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுவிட்டு புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பிய, யாஷிகா ஆனந்த் டாடா ஹேரியர் காரை படுவேகமாக ஓட்டியுள்ளார். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேறிக்காடு என்ற பகுதி அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதிய கார் விபத்துக்குள்ளானது.

27
Yashika anand

இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் வள்ளி செட்டி பவணி விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் இருக்கையில் இருந்ததால் யாஷிகாவின் நண்பர்கள் அமீர், சையது ஆகியோர் சிறு காயங்களுடன் தப்பியதாக தெரிகிறது.

37

விபத்தில் உடல் முழுவதும் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் தற்போது சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். யாஷிகாவிற்கு இடுப்பு, முதுகு, வயிறு, கால் என பல இடங்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது யாஷிகா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

47
Yashika anand

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு சற்றே உடல் நலம் தேறிய யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழியான வள்ளி செட்டி பவணி மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்டிருந்தார். 

57
yashika anand

அதேபோல் விபத்தின் போது தான் குடிக்கவில்லை என்றும், தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டும் என்றும் பதிவிட்டிருந்தார். மேலும் படுக்கையிலேயே இயற்கை உபாதைகளை கழிப்பதாகவும், எழுந்து நடக்கவே 5 மாதமாகும் என்றும் யாஷிகா தன்னுடைய உடல் நிலை குறித்து வெளியிட்ட உருக்கமான பதிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

67

இன்று யாஷிகா ஆனந்தின் பிறந்தநாளை முன்னிட்டு சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். ஆனால் நேற்றே தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு யாஷிகா கோரிக்கை விடுத்திருந்தார். இருந்தாலும் யாஷிகாவின் மீதான அன்பு காரணமாக ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வாழ்த்து கூறி வருகின்றனர். 

77
Yashika anand

இந்நிலையில் யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. யாஷிகாவை பார்க்கச் சென்ற நண்பர் ஒருவர்  Ge twell Soon Yashika anand என பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. 

click me!

Recommended Stories