பொறுத்ததெல்லாம் போதும்... இனி காத்திருக்க முடியாது! அதிரடி ஆட்டத்தை ஆரம்பிக்க தயாராகும் வைகை புயல் வடிவேலு!

First Published Aug 4, 2021, 2:49 PM IST

மீம்ஸ் நாயகனாக மட்டுமே கடந்த சில வருடங்களாக கண்டு ரசிக்கப்பட்டு வரும், வைகைப் புயல் வடிவேலு... தற்போது அதிரடி முடிவு எடுத்து... விரைவில் தன்னுடைய நடிப்பை வேறு லெவலில் துவங்க தயாராகி வருகிறாராம். 
 

1990ம் ஆண்டு முதலே தமிழ் சினிமாவை மையம் கொண்டு காமெடி புயலாக கலக்கி வருபவர் வைகைப் புயல் வடிவேலு. இன்று வரை வடிவேல் ஏதாவது ஒரு படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க மாட்டாரா? எனும் ஏங்கும் ரசிகர்கள் ஏராளம். அப்படிப்பட்ட லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். 

நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த அற்புதக் கலைஞன். ‘வீச்சருவா வீராசாமி’, ‘சூனா பானா’,‘தீப்பொறி திருமுகம்’, ‘நாய் சேகர்’, ‘ஸ்நேக் பாபு’, ‘படித்துறை பாண்டி’, ‘என்கவுண்டர் ஏகாம்பரம்’, ‘பாடி சோடா’, ‘வண்டு முருகன்’, ‘அலாட் ஆறுமுகம்’ என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனி ஸ்டைல், உடல்மொழி, வசனம் என ரசிகர்களை குதூகலப்படுத்தியவர்.

மீம்ஸ் நாயகனாக மட்டுமே கண்டு ரசித்து வந்த வைகைப் புயல் வடிவேலு சமீபத்தில், சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் அல்லாடி கொண்டிருக்கிறார். இதிலே இவர் தான் நடிக்க ஒத்துழைப்பு தர  மறுக்கிறார் என்றது, 'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி' படக்குழு.

இவரை பற்றிய சர்ச்சைகள் நீண்டு கொண்டே இருக்க, விரைவில் அனைத்து பிரச்சனைகளும் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் முன்னிலையில் பேசி முடிக்கப்பட்டு, மீனும் வடிவேலு நடிக்க தயாராகி வருவதாகவும், சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வரை, இவர் நடிக்க உள்ள படம் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே இனி பொறுத்ததெல்லாம் போதும் என முடிவு செய்துள்ள வடிவேலு ரசிகர்களுக்காக அதிரடி முடிவு ஒன்றையும் எடுத்துள்ளாராம். 

திரைப்படங்களை தொடர்ந்து சில ஓடிடி தளத்திற்காக வெப் தொடரில் நடிக்க கேட்டு கொண்டதால், பல முன்னணி பிரபலங்கள் அடுத்தடுத்து ஓடிடி தொடரின் நடிக்க ஆர்வம் காட்டி வருவது போல், இவரும் ஓடிடி வெப் சீரிஸில் விரைவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

click me!