இந்த சீசனில் அதிகம் சண்டை போட்ட போட்டியாளர் என்றால் அது அருண் பிரசாத் தான். அவர் முதலில் சில வாரங்கள் எந்தவித சண்டை சச்சரவுகளிலும் சிக்காமல் சைலண்டாக இருந்த நிலையில், வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்ததும் தன் ஆட்டத்தை ஆரம்பித்தார். குறிப்பாக மஞ்சரி, முத்துக்குமரன், தீபக் ஆகியோருடன் சண்டையிட்ட அருண், ஒரு கட்டத்தில் அவர் மீது இருக்கும் தவறை திருத்திக் கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு செல்லும் போது தான் ஒரு புது மனிதனாக செல்வதாக பெருமிதம் கொண்டார்.