இதை அறிந்த வடிவேலு, சரி பெரிய பட்ஜெட் படம்தானே, நாமும் சம்பளத்தை உயர்த்திக் கேட்கலாம் என முடிவெடுத்து, இப்படத்தில் நடிக்க ரூ.25 ஆயிரம் சம்பளமாக கேட்டாராம். இதனால் டென்ஷன் ஆன பாரதிராஜா, நீ நடிக்கவே வேண்டா கிளம்புனு விரட்டிவிட, கண்ணீருடன் அங்கிருந்து சென்றிருக்கிறார் வடிவேலு. இதைப்பார்த்த அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு, என்னப்பா ஆச்சுனு வடிவேலுவிடம் கேட்க, அவரும் நடந்ததை கூறி இருக்கிறார்.