Director Bhagyaraj Net Worth : இயக்குநர் பாக்யராஜ் இன்று மாரடைப்பால் காலமானார். இந்த நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு என அனைத்து துறைகளிலும் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் கே. பாக்யராஜ். இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பின்னர் தனக்கென ஒரு புதிய பாணியை உருவாக்கி ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தைப் பிடித்தார்.
சினிமாவின் ஆரம்ப நாட்களில் பாரதிராஜா இயக்கிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களிலும், பின்னணி குரல் கொடுக்கும் வாய்ப்புகளிலும் மட்டுமே பாக்யராஜ் தோன்றினார். மெலிந்த தோற்றத்துடன் சிகப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட சில படங்களில் அவரைக் காண முடிந்தாலும், நடிகராக அவரை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தியது புதிய வார்ப்புகள் திரைப்படம்தான். அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ஒரு புதிய திறமையை கண்டது.
அதன்பிறகு இயக்குநராக களமிறங்கிய பாக்யராஜ், குடும்ப உறவுகள், நகைச்சுவை, காதல், சமூக கருத்துகள் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து வித்தியாசமான திரைக்கதையுடன் படங்களை உருவாக்கினார். குறிப்பாக பெண்கள் மற்றும் குடும்ப ரசிகர்களை அதிகம் கவர்ந்த இயக்குநராக அவர் மாறினார்.
1983-ஆம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த அந்த படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது. அன்றைய காலகட்டத்தில் பெண்கள் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று படம் பார்த்த அரிய நிகழ்வுகளில் ஒன்றாக அது அமைந்தது.
பாக்யராஜ் நடித்த விதி திரைப்படத்தில் அவர் நடித்த சிறிய தபால்காரர் கதாபாத்திரம் சில நிமிடங்கள் மட்டுமே திரையில் வந்தாலும், நகைச்சுவையால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது. அவரது நடிப்புத் திறனை வெளிப்படுத்திய மற்றொரு படமாக ருத்ரா குறிப்பிடப்படுகிறது. வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்ட நீண்ட காட்சியில், புத்திசாலித்தனமும் நகைச்சுவையும் கலந்த அவரது நடிப்பு பாராட்டைப் பெற்றது.
பாக்யராஜின் திரைக்கதை அமைப்பும், இயல்பான நடிப்பும் இந்திய திரையுலகிலும் கவனிக்கப்பட்டது. இது நம்ம ஆளு திரைப்படத்தில் ஜாதி வேறுபாடு போன்ற முக்கியமான சமூகப் பிரச்சினையை நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்லிய விதம், அவரது திரைக்கதை திறனை வெளிப்படுத்திய சிறந்த உதாரணமாக கருதப்படுகிறது. எழுத்தாளர் பாலகுமாரன் இயக்கிய அந்தப் படம் இன்றும் பேசப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான பாக்யராஜ், அவரது மீது கொண்டிருந்த அன்பை அவசர போலீஸ் 100 திரைப்படத்தில் வெளிப்படுத்தினார். எம்.ஜி.ஆர் நடித்தும் வெளியாகாமல் போன படத்தின் சில காட்சிகளை தொழில்நுட்ப ரீதியாக இணைத்து, அவருடன் திரையில் தோன்றிய தனது நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். ஆராரோ ஆரிரரோ, சுந்தர காண்டம், ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி உள்ளிட்ட பல படங்கள் மூலம் கதை சொல்லும் திறனிலும், நடிகராகவும் பாக்யராஜ் தனித்துவமான இடத்தைப் பெற்றார்.
55
பாக்யராஜ் சொத்து மதிப்பு
காலம் மாறினாலும், குடும்ப ரசிகர்களின் மனதில் அவர் உருவாக்கிய அந்த இடம் இன்றளவும் மாறாமல் தொடர்கிறது. இப்படி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள பாக்யராஜ் இன்று மாரடைப்பால் காலமானார். அவரின் மறைவு திரையுலகினருக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாகவே உள்ளது. இந்த நிலையில், பாக்யராஜின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி அவரது சொத்து மதிப்பு ரூ.60 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. அவருக்கு சொந்தமாக சென்னையில் பிரம்மாண்ட வீடும் இருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.