பெங்காலி நடிகை ஆண்ட்ரிலா சர்மா காலமானார். அவருக்கு வயது 24, கடந்த 20 நாட்களாக ஹவுராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மதியம் சுமார் 12:59 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்றிரவு அவருக்கு பலமுறை மாரடைப்பு ஏற்பட்டு பின்னர் CPR கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை பலனளிக்காததால் அவர் இன்று உயிரிழந்தார்.