தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குறையாத காதலுடன் அஜித்தும், ஷாலினியும் இருப்பது பலரும் வியந்து பார்க்கும் விஷயமாகும். இது ஒரு புறம் இருக்க, அஜித்தின் முதல் காதல் பற்றி யாரும் பெரிதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது பிரேக் அப்பில் முடிந்த கதையை பற்றி பார்க்கலாம்.
நடிகர் அஜித் ‘என் வீடு என் கணவர்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இவருக்கு முதன்முதலில் திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது காதல் கோட்டை தான்.