சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் வாணி போஜன். சின்னத்திரை நயன்தாரா என பெயரெடுக்கும் அளவுக்கு மக்கள் மத்தியில் பேமஸ் ஆக இருந்த இவர், கடந்த 2020-ம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அப்படத்தில் மீரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். அவரது கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்களும் கிடைத்தன.
24
இதையடுத்து நடிகை வாணி போஜனுக்கு சினிமாவில் வாய்ப்புக்கள் குவிந்தன. இதனால் சீரியலில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார் வாணி. கைவசம் டஜன் கணக்கிலான படங்களை வைத்து நடித்து வந்த வாணி போஜனுக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் குறையத் தொடங்கி உள்ளதாம். இதற்கு அவர் பிரபல நடிகருடன் லிவ்விங் டுகெதரில் இருப்பது தான் காரணமாக கூறப்படுகிறது.
பிரபல நடிகரும், சினிமா பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை வாணி போஜன் குறித்து பகீர் தகவல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது : “வெப் தொடர் ஒன்றில் நடித்தபோது ஜெய்யும் வாணி போஜனும் நெருக்கமானார்கள். இதனால் வாணி போஜனுக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன. ஆனால் வாணி போஜன் தினமும் தன்னிடம் இயக்குனர்கள் கதை சொல்ல வருகிறார்கள் என சொல்கிறார்.
44
வாணி போஜன் கதை கேட்கும்போதெல்லாம் ஜெய் கூடவே இருக்கிறார். ஜெய் சம்மதித்தால் தான் வாணி போஜன் கதையை ஒப்புக்கொள்கிறார். வாணி போஜன் தற்போது ஜெய்யுடன் லிவ்விங் டுகெதரில் இருப்பதாக தகவல். சமீபத்தில் வாணி போஜன் கூட உஷாராகிவிட்டேன் என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.. இதற்கு என்ன அர்த்தம் என்பது தெரியவில்லை” என பயில்வான் கூறி உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.