பதறும் அனிதாவிடம் திமிராக பேசும் பாலா..! சொதப்பும் டாஸ்க்... புலம்பும் சனம்..!

First Published Nov 18, 2020, 1:23 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டாஸ்குகள் கடுமையாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம். அதன் படி நேற்றைய தினம், குறிப்பிட்ட நேரத்திற்குள், சமைப்பது, சாப்பிடுவது, தண்ணீர் பிடித்து வைத்து கொள்வது, குளிப்பது என போட்டியாளர்களை பாடாய் படுத்தி வருகிறார் பிக்பாஸ்.
 

குறிப்பாக இந்த மணி கூண்டு டாஸ்கில், வெளியே வைக்கப்பட்டிருக்கும் கடிகாரம் போன்ற அமைப்பில் நின்று போட்டியாளர்கள் நேரத்தை கணக்கிட வேண்டும். அதன்படி நேற்றைய தினம், ஆரி அணியை சேர்ந்தவர்கள் மூன்று மணிநேரம், 1 நிமிடத்தில் துல்லியமாக கணித்தனர்.
undefined
முதல் புரோமோவில் போட்டியாளர்கள் இந்த டாஸ்குக்காக படும் பாடுகள் தான் காட்டப்பட்டது.
undefined
இதை தொடர்ந்து வெளியாகியுள்ள மற்றொரு ப்ரோமோவில், ஏற்கனவே பாட்டி சொல்லை தட்டாதே டாக்கில் சொதப்பியது போல், பாலாஜி இன்று மீண்டும் சொதப்பியுள்ளது வெளியாகியுள்ளது.
undefined
மணிக்கூண்டு டாஸ்க்கில் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒருமுறை அணி மாற வேண்டும் என்ற நிலையில் சனம், நிஷா, அனிதா அணியின் நேரம் முடிவடைந்து பாலாவின் அணியின் நேரம் ஆரம்பமாகிறது.
undefined
பாலா தூங்கி கொண்டிருந்தார். அவரை அவரது அணியில் உள்ள ரம்யா எழுப்ப முயன்றும் அவர் எழுந்திருக்கவில்லை. பின்னர் அனிதா வந்து எங்கள் நேரம் முடிந்துவிட்டது என்று கூறியபோது, ‘ஏன் டென்ஷன் ஆகுறீங்க, இப்படியெல்லாம் கூப்பிட்டால், நான் வரவே மாட்டேன்’ என்று திமிராக பேசுகிறார் பாலா.
undefined
இன்னொரு பக்கம் நேரம் முடிவடைந்தும் பாலா அணியினர் வராததால் 5 நிமிடத்திற்கு மேல் ஆனால், பட்ஜெட் போய்விடும் என சனம் புலம்புவதை பார்க்க முடிகிறது.
undefined
மேலும் பாலாவின் செயல், மற்ற போட்டியாளர்களை கடுப்பாக்கி உள்ளதால், இதனால் இன்னும் சில பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
undefined
click me!