காலம் போன கடைசியில் இப்படியொரு ஆசையா?... த்ரிஷாவை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்...!

First Published Nov 18, 2020, 1:02 PM IST

சினிமாவில் தொடர்ந்து நடித்துக்கொண்டு தான் இருப்பேன். அதுவே என் மூச்சு என்று த்ரிஷா திருமணத்தை நிறுத்தியதற்கு காரணம் கூறினார். 

திரையுலகில் 17 ஆண்டுகளை கடந்து இன்று வரை முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவரும் பாகுபலி வில்லன் நடிகரான ராணாவும் காதலிப்பதாக பல ஆண்டுகளாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் நாங்கள் இருவரும் வெறும் நண்பர்கள் என கூறிக்கொண்டு வந்த நிலையில், இருவரும் பரஸ்பரம் பிரிந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
undefined
தற்போது கொரோனா லாக்டவுனில் மிஹீகா பஜாஜ் என்பவரை காதலிப்பதாக கூறிய ராணா, அவரையே கல்யாணமும் செய்து முரட்டு சிங்கிளில் இருந்து குடும்பஸ்தனாக புரோமோஷன் வாங்கிவிட்டார்.
undefined
இதற்கு முன்னதாகவே த்ரிஷாவுக்கும் திரைப்பட தயாரிப்பாளரான வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்க கூடாது என கண்டிஷன் போட்டதால் வருண் மணியனை பிரிந்தார் த்ரிஷா.
undefined
சினிமாவில் தொடர்ந்து நடித்துக்கொண்டு தான் இருப்பேன். அதுவே என் மூச்சு என்று த்ரிஷா திருமணத்தை நிறுத்தியதற்கு காரணம் கூறினார். அதேபோல் இன்று வரை திருமணத்தை பற்றி யோசிக்காமல் படங்களில் நடித்து வருகிறார்.
undefined
சமீபத்தில் சிம்புவும் த்ரிஷாவும் காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூட வதந்திகள் பரவின.
undefined
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து மனம் திறந்துள்ள த்ரிஷா, என்னை முழுமையாக புரிந்து கொள்பவரை தான் நான் திருமணம் செய்து கொள்வேன். என் திருமணம் கண்டிப்பாக காதல் திருமணம் தான். என்னை புரிந்து கொள்ளும் நபரை நான் சந்திக்கும்போது தான் திருமணம். அது வரை சிங்கிளாக இருப்பதில் கவலை இல்லை. மனதுக்கு பிடித்த நபரை நான் சந்திக்காமல் போய்விட்டால், கடைசி வரை சிங்கிளாக இருக்கவும் தயார் என்றார் என தெரிவித்துள்ளார்.
undefined
இதைக்கேட்ட நெட்டிசன்களோ ஏற்கனவே வயது ஏறிக்கொண்டே செல்கிறது. உடனடியாக கல்யாணத்தை செய்து கொண்டு செட்டில் ஆகாமல் இந்த வயசில் போய் எப்ப காதலித்து எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என கிண்டலடித்து வருகின்றனர்.
undefined
click me!