திருமணத்திற்கு முன் நடந்த நலங்கு வைக்கும் வைபவ புகைப்படத்தை பகிர்ந்த அதியா ஷெட்டி!

Published : Jan 29, 2023, 06:28 PM IST

பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி திருமணத்திற்கு முன்னதாக நடந்த நலங்கு வைபவ நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  

PREV
15
திருமணத்திற்கு முன் நடந்த நலங்கு வைக்கும் வைபவ புகைப்படத்தை பகிர்ந்த அதியா ஷெட்டி!

பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டிக்கும், இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் 5 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 23 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சுனில் ஷெட்டி கொடுத்த 50 கோடி பங்களா!.. அதியா ஷெட்டி - கே.எல்.ராகுலுக்கு பிரபலங்கள் கொடுத்த பரிசுகள் என்ன?

25
சுனில் ஷெட்டி

மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் வைத்து இவர்களது திருமணம் மிக பிரமாண்டமாக நடந்தது. 

மாமனார் பொறுப்பை விட அப்பா பொறுப்பை நான் நன்றாகவே நிறைவேற்றுகிறேன்: சுனில் ஷெட்டி!

35
மனா ஷெட்டி

அதியா ஷெட்டியின் அம்மா மனா ஷெட்டி மகளுக்கு பூ வைத்து ஆசிர்வாதம் செய்துள்ளார்.

மஞ்சள் பூசி விளையாடும் கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி: கோலாகலமாக நடந்த உறவினர்கள், நண்பர்களின் நலங்கு வைபவம்!

 

45
அதியா ஷெட்டி

இந்த திருமண நிகழ்ச்சிக்கு இஷான் கிஷான், வருண் ஆரோன், சினிமா பிரபலங்கள் டயானா பென்டி, அன்ஷுலா கபூர், கிருஷ்ணா ஷெராஃப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எப்படி நேசிக்க வேண்டும் என்று கற்றுக் கொள்கிறேன்: திருமணத்திற்கு பிறகு கேஎல் ராகுல் முதல் டுவீட்!

55
அதியா ஷெட்டி நலங்கு வைபவம்

இந்த திருமண நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஹல்டி எனப்படும் மஞ்சள் பூசும் நிகழ்ச்சி நடந்தது. இதில், கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவரும் மஞ்சள் பூசி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில், அதியா ஷெட்டி திருமணத்திற்கு முன்னதாக நடந்த நலங்கு வைக்கும் வைபவத்தின் நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories