இந்நிலையில் இந்த ஆண்டின் நடுப்பகுதியிலேயே இந்த திரைப்படம் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் அது குறித்த தகவல்கள் முழுமையாக வெளியாகாமல் இருக்கிறது. இதற்கு இடையில் "ராயன்" திரைப்படத்தை முடித்த தனுஷ், தற்பொழுது "இட்லி கடை", "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்", தெலுங்கு மொழியில் "குபேரா" ஆகிய படங்களில் பிஸியாக இருக்கும் நேரத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜை வைத்து மற்றொரு திரைப்படத்தையும் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி தொடர்ச்சியாக அவர் பிற படங்களில் பிஸியாக இருக்கும் நிலையில், அவர் மீண்டும் எப்பொழுது இளையராஜா திரைப்படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என்பது சந்தேகமாகியிருக்கிறது. இவ்வாண்டு இறுதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிக்கப்படும் என்று எண்ணிய நிலையில், தற்போது அது அடுத்த ஆண்டு வரை நீள அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஊழியர்களுக்கு பரிசு பொருட்கள்; மகன்கள் மற்றும் கணவரோடு விஜயதசமியை கொண்டாடிய நயன்தாரா! Video!