இயக்குனர் 'வசந்த்' இயக்கத்தில், 2000-ஆம் ஆண்டு வெளியான ரொமான்டிக் ட்ராமா திரைப்படம் ரிதம். இந்த படத்தில் அர்ஜூன் கதாநாயகனாக நடிக்க, மீனா, ஜோதிகா, ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இவர்களுடன் ரமேஷ் அரவிந்த், லட்சுமி, நாகேஷ், மணிவண்ணன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
24
Rhythm Movie
இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க, பிரமிட் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் வெளியாகி 24 ஆண்டுகள் ஆனாலும் கூட, இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் பாடல்களாக உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களுமே, நீர், காற்று, நிலம், ஆகாயம், நெருப்பு, என ஐம்பூதங்களை மையப்படுத்தி எழுதப்பட்டிருந்தது.
குறிப்பாக 'நதியே நதியே... பாடல் நீரை மையமாக வைத்து, எழுதப்பட்ட பாடலாகும். இந்த பாடலை ஏ ஆர் ரகுமான் இசையில், உன்னி மேனன் பாடி இருப்பார். அதை போல் 'காற்றே என் வாசல் வந்தாய்' என தொடங்கும் பாடல் காற்றை மையமாக வைத்து எழுதப்பட்டது. இந்த பாடலை கவிதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பாடியிருந்தனர். 'தனியே தன்னந்தனியே' பாடல் நிலத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட பாடலாகும். இதனை சங்கர் மகாதேவன் பாடியிருப்பார். மேலும் இந்த பாடலில் கேமியோ ரோலிலும் வந்து ஆட்டம் போட்டிருப்பார் சங்கர் மகாதேவன்.
44
AR Rahman Songs
'அன்பே இது' என தொடங்கும் பாடல், ஆகாயத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது. இதை சாதனா சர்கம் பாடியிருப்பார். கடைசியாக நெருப்பை மையமாக வைத்து எழுதப்பட்டிருந்த பாடல், அய்யய்யோ 'பத்திக்கிச்சு பத்திக்கிச்சு' இந்த பாடலில் ரம்யா கிருஷ்ணன் ஆட்டம் போட்டிருப்பார். உதித் நாராயணன் மற்றும் வசுந்தரா தாஸ் இந்த பாடலை பாடியிருந்தனர். இந்த 5 பாடல்களுமே ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட் பாடல்கள் லிஸ்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.