இதன் மூலம் இதுவரை அதிக தேசிய விருதுகளை வென்ற இசையமைப்பாளராக ஏ.ஆர். ரகுமான் புதிய சாதனை படைத்துள்ளார். இதுவரை ஏ.ஆர். ரகுமான் மொத்தம் 7 தேசிய விருதுகளை வென்றுள்ளார். முதன்முறையாக 1992 ஆம் ஆண்டு ரோஜா படத்திற்காக சிறந்த இசைக்கான தேசிய விருதை வென்றார். 1996 இல் மின்சார கனவு படத்திற்காகவும், 2001ல் லகான் படத்திற்காகவும், 2002ல் கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்காகவும், 2007 இல் சிலியன் படத்திற்காகவும், 2017 இல் மாம் படத்திற்காகவும் தேசிய விருதுகளை வென்றார் ஏ.ஆர். ரகுமான். தற்போது 2022 ஆம் ஆண்டிற்கான பொன்னியின் செல்வன் படத்திற்காக 7வது முறையாக தேசிய விருதை வென்றுள்ளார்.