விஐயகாந்த் நடிப்பில் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களில் ஒன்று தான் வைதேகி காத்திருந்தார். இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜயகாந்த், ரேவதி, கவுண்டமனி, செந்தில், பிரமிலா ஜோஷாய், உசிலமணி, ராதா ரவி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இதில், விஜயகாந்த் முதலில் நடிகை பிரமிளா ஜோஷாயை காதலிக்க, திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில் விளையாட்டு வினையாக தற்கொலை செய்து கொள்வார்.