5 லட்சம் தரேன் அந்த இடத்தை காட்டு.. கேன்சரால் அவதிப்படும் 'அங்காடி தெரு' சிந்துவுடம் கொச்சையாக பேசிய நபர்!

First Published Mar 25, 2023, 4:33 PM IST

நடிகை அங்காடி தெரு சிந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தன்னுடைய சிகிச்சைக்காக பலரிடம் பண உதவி கேட்டு வரும் நிலையில், இவர் உடல்நலம் இல்லாதவர் என்று கூட பாராமல்... மிகவும் கொச்சையாக ஒரு மனிதர் பேசியதாக, அவரை பேட்டி ஒன்றில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

தமிழ் சினிமாவில், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக குணச்சித்திர வேடத்திலும், வில்லியாகவும் நடித்து பிரபலமானவர் 'அங்காடித்தெரு' சிந்து. இவர் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், அங்காடித்தெரு படம் இவருக்கு, நல்ல பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்ததால், பின்னர் ரசிகர்களாலும்.. திரையுலகினராலும்.. அங்காடி தெரு, சிந்து என்றே அழைக்கப்பட்டார்.

மேலும் இவர் தெனாவட்டு, கருப்பசாமி குத்தகைக்காரர், நான் மகான் அல்ல, போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். கொரோனா முதல் கட்ட பரவலின் போது, தனக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டதாக தெரிவித்தார். ஆனால், அந்த நிலையிலும் தன்னால் முடிந்தவரை சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நலிந்த கலைஞர்களுக்கு உதவிகளை செய்து வந்தார்.

அடேங்கப்பா... வியக்க வைக்கும் பிரமாண்டம்! தனுஷின் 150 கோடி வீட்டை உள்ளே பார்த்திருக்கீங்களா? ஹோம் டூர் வீடியோ!

கொரோனா நேரத்தில் சரியான சிகிச்சை எடுக்க முடியாமல் தவித்த சிந்து, இதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டார். அப்போது மார்பகத்தில், அதிகமாக புற்றுநோய் பரவி இதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இவருக்கு கேன்சருக்கான அறுவை சிகிச்சை நடந்து மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையில், இதுவரை இந்த அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட காயம் ஆறவில்லை என கூறப்படுகிறது. அதேபோல் சில சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தாலும், உடல் நிலை காரணமாக.. நடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

ஆபத்தான நிலையில் ICU-வில் அனுமதிக்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீ எப்படி இருக்கிறார்? உடல்நிலை குறித்து வெளியான தகவல்!

இவரின் மகருமகன், இளம் வயதிலேயே ஹார்ட் அட்டாக் காரணமாக உயிரிழந்து விட்ட நிலையில், தன்னுடைய மகள் மற்றும் பேரக்குழந்தையையும் சிந்து தான் காப்பாற்றி வருகிறார். சிந்துவின் நிலையை, அறிந்து கோவை சரளா, மனோபாலா, ராகவா லாரன்ஸ், போன்ற பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். 

புற்றுநோய் மேலும் பரவும் நிலையில் உள்ளதால், தொடர்ந்து தன்னுடைய சிகிச்சையை மேற்கொள்ள பணம் வேண்டுமென மிகவும் உருக்கமாக சில வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சிந்துவுக்கு ஒருவர் அனுசரணையாக பேசி விசாரித்துள்ளார். பின்னர் வீடியோ காலில் வர சொல்லியுள்ளார்.  இதற்கு சிந்து ஏன் என கேட்டபோது,  ஒரு பக்க மார்பகத்தில்தானே உனக்கு கேன்சர் கட்டி இருக்கிறது. இன்னொரு பக்க மார்பகத்தை காட்டு ஐந்து லட்சம் தருகிறேன் என மிகவும் கொச்சியாக பேசி பேசியதாக கண்ணீரோடு பேட்டி ஒன்று சிந்து கூறியுள்ளார்.

சினிமாவில் அட்ஜஸ்ட்மெட் பிரச்சனை இருக்கு..! தன்னுடைய அனுபவம் குறித்து பேசிய பிரியா பவானி ஷங்கர்..!

click me!