அனல் மேலே பனித்துளியாய் ஆண்ட்ரியா..வெளியான பர்ஸ்ட் லுக்..

First Published May 9, 2022, 6:57 PM IST

பாடகி, நாயகி என கலக்கி வரும் ஆண்ட்ரியா தற்போது நடித்துள்ள அனல் மேலே பனித்துளி படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

Andrea Jeremiah

புஷ்பா படம் வெளியாகும் முன்னரோ ஓ..சொல்ட்ரியா மாமா பாடல் வெளியாக ஹிட் அடித்தது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடியிருந்தார்.

Andrea Jeremiah

அஸ்கி வாய்ஸில் அனைவரையும் கவர்ந்த ஆண்ட்ரியா, முன்னதாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தியுடன் நடித்தன் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

Andrea Jeremiah

பாடகியாக இருந்தது நடிகையாக உயர்ந்த ஆண்ட்ரியா  “மங்காத்தா“, “சகுனி“, “இது நம்ம ஆளு”, தரமணி, விஸ்வரூபன் இரண்டு பாகங்கள், வடசென்னை, அரண்மனை, காட்டேரி என வரிசையாக படங்களில் நடித்தார் ஆண்ட்ரியா. 

Andrea Jeremiah

சொந்த வாழ்க்கையில் தோல்விகளை சந்தித்த ஆண்ட்ரியா மன அழுத்தத்திற்கான சிகிச்சைக்கு பிறகு மீண்டும் தனது அலுவல்களில் ஈடுபட்டு வருகிறார்.

Andrea Jeremiah

அரண்மனையில் பேயாக நடித்திருந்த இவருக்கு மிஷ்கினின் பிசாசு 2 வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் மிரட்டலான நடிப்பை வெளி கொணர்ந்துள்ளார் ஆண்ட்ரியா.

Andrea Jeremiah

ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் டி.முருகானந்தம் தயாரிக்கிறார். படப்பிடிப்பு முடிந்து புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  

andrea jeremiah

இப்படத்தின் டீசர் ஏப்ரல் 29ஆம் தேதி  வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசர் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகியுள்ளது

andrea jeremiah

பிசாசு 2 வை தொடர்ந்து ஆண்ட்ரியா தற்போது அனல் மேலே பனித்துளி என்னும் ப்ராஜெக்டில் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் முதல் பார்வை வெளியாகியுள்ளது.

click me!