நடிகர் சங்க அறங்காவலர்கள் நியமனம்..ஒப்புதல் அளித்த பொதுக்குழுவில்

First Published May 9, 2022, 5:21 PM IST

நாசர், விஷால், கார்த்தி, கமல்ஹாசன், பூச்சிமுருகன் உள்ளிட்டோர் அறங்காவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

NADIGAR SANGAM

மூன்று முறை சரத்குமார் நடிகர் சங்க தலைவராக இருந்ததை அடுத்து இவருக்கு எதிராக கிளம்பிய விஷால் குரூப் நடிகர் சங்க கட்டிடம் கட்டியே ஆக வேண்டும் என குரல் கொடுத்தனர்.

nadigar sangam

இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு  நடந்த சங்க தேர்தலில் நாசர் தலைமையில் விஷால் அணி களம் கண்டது. கோலாகலமாக நடைபெற்ற இந்த தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்றது.

nadigar sangam

இதையடுத்து தங்களின் கோரிக்கையான சங்க கட்டிடம் காட்டும் பணியை மேற்கொண்டனர். பின்னர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் நாசர் தலைவராக போட்டியிட்டார். அந்த தேர்தலில் பாக்கியராஜ் எதிர்தரப்பில் போட்டியிட்டார்.

NADIGAR SANGAM

இந்த தேர்தலில் முறைகேடு என கூறி நீதிமன்றத்தில் முறையிட்டதை தொடர்ந்து தேர்தல் முடிவுகள் ஒத்தி வைக்கப்பட்டு. சங்க செயல்பாடுகளை கவனிக்க அரசு சார்பில் அலுவலர் நியமிக்கப்பட்டார்.

NADIGAR SANGAM

சமீபத்தில் நீதிமன்ற அனுமதியுடன் எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் மீண்டும் நாசர் தலைமையிலான அணி வெற்றி கண்டதோடு, முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

nadigar sangam

இந்நிலையில்  மீண்டும் பதவியேற்று கொண்ட நடிகர் சங்க நிர்வாகிகள் தலைமையில் நேற்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகள் சங்க கட்டிடம் கட்ட தேவையான படத்திற்காக வங்கி கடன் பெற முடிவு செய்துள்ளதாகவும், நடிகர் நடிகைகளிடம் நிதி கேட்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

NADIGAR SANGAM

இதற்கிடையே சங்கத்திற்கு வரும் நிதியை பாதுகாக்க அறங்காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை அடுத்து அதற்கான தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

NADIGAR SANGAM

இந்நிலையில் நடிகர் சங்க அறங்காவலர்களாக நாசர், விஷால், கார்த்தி, கமல்ஹாசன், பூச்சிமுருகன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

click me!