திருமணமானவருடன் தகாத உறவு... உடல் அளவில் காயப்படுத்தினார்! முதல் முறையாக பிரபலம் மீது ஆண்ட்ரியா குற்றசாட்டு!

First Published Dec 15, 2022, 8:42 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஆண்ட்ரியா, முதன் முறையாக, பிரபலம் ஒருவரால் உடல் அளவிலும், மனதளவிலும் காயப்பட்டுள்ளதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

'கண்ட நாள் முதல்' படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா, இதை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில், சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து, முதல் படத்திலேயே ரசிகர்களை அதிகம் கவர்ந்தார்.

இதை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆளு, போன்ற பல படங்களில் நடித்த இவர், கமல்ஹாசனுடன் விஸ்வரூபம் 1 மற்றும் விஸ்வரூபம் 2 ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.

பிரபல நடிகரை திருமணம் செய்து கொண்ட விஜய் டிவி சீரியல் ஹீரோயின்..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!

இப்படி பல படங்களில் நடித்திருந்தாலும், இவர் நடிப்பில் வெளியான 'தரமணி' மற்றும் 'வட சென்னை' ஆகிய படங்கள் இவரை வேறு லெவலுக்கு கொண்டு சென்றது. அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த நேரத்தில் திடீர் என இரண்டு வருடங்கள் எந்த படத்திலும் நடிக்காமல் சிறிய பிரேக் எடுத்து கொண்டார்.

சமூக வலைத்தளத்தில் எப்போதும் படு ஆக்டிவாக இருக்கும் இவர் சில கவிதைகளையும் எழுதி வெளியிட்டு வந்தார். இந்நிலையில் ஆண்டிரியா திருமணமான பிரபலம் ஒருவருடன் தவறான உறவில் இருந்ததாக வெளிப்படியாக கூறி, அதனால் ஏற்பட்ட வலியின் காரணமாகவே சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

'வாரிசு' படத்தின் ஆடியோ லான்ச் எங்கு? எப்போது நடைபெறுகிறது..! பரபரக்கும் ஏற்பாடுகள்.. வெளியான தகவல்!
 

திருமணமான ஒரு பிரபலத்துடன் தவறான உறவு வைத்திருந்தேன், அந்த நபர் என்னை மனதளவிலும், உடலளவிலும் அதிக காயப்படுத்தினார். நான் அப்போது செய்த தவறால், என் வாழ்க்கையே இருண்டு போனது.  அதில் இருந்து வெளியே வர பல கவிதைகள் எழுதினேன். ஆதீத மன உளைச்சலுக்கு ஆளான நான், அதில் இருந்து விடுபட ஆயூர்வேத சிகிச்சை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் இவ்வளவு தகவலை சொன்ன அவர், அந்த நபர் யார் என்பதை மட்டும் கூற மறுத்துவிட்டார்.
 

Andrea Jeremiah

தற்போது ஒருவழியாக அந்த வலியில் இருந்து மீண்டு, படப்பிடிப்புகள், பாடல்கள், போன்றவற்றில் கவனம் செலுத்தி வரும் ஆண்டிரயா, மாஸ்டர் படத்தின் மூலம் தான் ரீ-என்ட்ரி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா பவானி ஷங்கர் நடித்த 'கல்யாணம் முதல் காதல் வரை'... 'ஈரமான ரோஜாவே 2' சீரியல் பிரபலம் அதிர்ச்சி மரணம்!

விரைவில் இவர் மிஷ்கின் இயக்கத்தில் நடித்துள்ள, பிசாசு திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில்.. இதை தொடர்ந்து சுமார் 6 படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். எனினும் இவர் உறவு வைத்திருந்த அந்த நபர் யார் என்பது குறித்த விவாதம் தான் சமூக வலைத்தளத்தில் பற்றி எரிந்து வருகிறது.
 

click me!