ஸ்டண்ட் மேன் ராஜு மரணம்; கப்சிப்னு இருக்கும் தமிழ் நடிகர்கள்... கர்ணன் போல் வந்து உதவிய அக்‌ஷய் குமார்

Published : Jul 18, 2025, 02:32 PM IST

ஸ்டண்ட் மேன் எஸ்.எம்.ராஜு அண்மையில் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி மரணமடைந்த நிலையில், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஸ்டண்ட் மேன்களுக்காக உதவிக்கரம் நீட்டி உள்ளார்.

PREV
14
Akshay Kumar Help For Stuntmen

பாலிவுட்டின் 'கில்லாடி' நடிகர் என்று அழைக்கப்படும் அக்‌ஷய் குமார், திரையில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் ஒரு ஹீரோ என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். சமீபத்தில் ஸ்டண்ட் மேன் எஸ்.எம். ராஜுவின் மறைவுக்குப் பிறகு, திரைப்படத்துறையில் 650 ஸ்டண்ட் மேன்களுக்குக் காப்பீட்டு வசதியை வழங்கி மிகப்பெரிய ஆதரவை அளித்துள்ளார். அவரது இந்தச் செயலுக்குத் திரைப்படத்துறையில் பலத்த பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

24
ஸ்டண்ட் மேன் ராஜு மரணம்

சில நாட்களுக்கு முன்பு, பிரபல ஸ்டண்ட் மேன் எஸ்.எம். ராஜு பா.இரஞ்சித் இயக்கிய வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்தது. இந்தச் சம்பவம், திரைப்படத்துறையில் திரைக்குப் பின்னால், தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணிபுரியும் ஸ்டண்ட் மேன்களின் வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மை மற்றும் நிதிப் பாதுகாப்பின்மையை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.

34
ஸ்டண்ட் மேன்களுக்கு உதவும் அக்‌ஷய் குமார்

இந்தச் சூழ்நிலையில், 'திரைப்பட ஸ்டண்ட் மேன்கள் சங்கத்தின்' பொதுச் செயலாளர் எஜாஸ் குலாப், சங்க உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து, நேரடியாக நடிகர் அக்‌ஷய் குமாரைத் தொடர்பு கொண்டார். ஸ்டண்ட் மேன்களின் கஷ்டங்களை விளக்கி, அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தார். எஜாஸ் குலாப்பின் கோரிக்கையைக் கேட்டவுடன், ஒரு கணம் கூட யோசிக்காமல் உடனடியாகச் உதவ முன்வந்தார் அக்‌ஷய் குமார்.

சங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட 650 ஸ்டண்ட் மேன்களுக்கும் தலா 10 லட்ச ரூபாய் காப்பீட்டுத் தொகையை வழங்க முன்வந்துள்ளார். இதன் சிறப்பு என்னவென்றால், இந்தக் காப்பீட்டின் முழு பிரீமியம் தொகையையும் அக்‌ஷய் குமார் தனிப்பட்ட முறையில் செலுத்துகிறார். இது அவரது பெருந்தன்மையையும், ஸ்டண்ட் மேன்கள் மீதான அவரது அக்கறையையும் எடுத்துக்காட்டுகிறது.

எஜாஸ் குலாப் இது குறித்துப் பேசுகையில், "நாங்கள் அக்‌ஷய் சாரைத் தொடர்பு கொண்டபோது, அவர் உடனடியாக எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். 650 ஸ்டண்ட் மேன்களின் முழு காப்பீட்டு பிரீமியத்தையும் அவரே செலுத்துகிறார். நாங்கள் அவருக்கு என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். அவரது இந்த உதவியால், இனி எந்த ஒரு சண்டைக்காரரின் குடும்பமும் நிதி நெருக்கடியைச் சந்திக்காது என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது," என்று நன்றி தெரிவித்தார்.

44
அக்‌ஷய் குமாருக்கு குவியும் பாராட்டு

அக்‌ஷய் குமார் ஒரு தற்காப்புக் கலை வீரர் மட்டுமின்றி தனது ஆரம்ப காலகட்டத்தில் ஸ்டண்ட் மேனாக பணிபுரிந்தவர். எனவே, ஸ்டண்ட் மேன்களின் கஷ்டங்களை அவர் நன்கு அறிவார். இதனால்தான் அவர் எப்போதும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார். 2017 ஆம் ஆண்டிலும் அக்‌ஷய் இதேபோல் ஸ்டண்ட் மேன்களுக்காகக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார், அது பலருக்கும் உதவிகரமாக இருந்தது.

இப்போது மீண்டும் அதே உறுதிப்பாட்டை அவர் வெளிப்படுத்தியுள்ளார். மொத்தத்தில், அக்‌ஷய் குமாரின் இந்தச் செயல் வெறும் நிதி உதவி மட்டுமல்ல, தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பணிபுரியும் ஸ்டண்ட் மேன்களுக்கு அளித்த பாதுகாப்பு, தைரியம் மற்றும் மரியாதை. அவரது இந்த நடவடிக்கை மற்றவர்களுக்கும் ஒரு உத்வேகமாக அமையும். அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories