இந்த பட்டியலில் நடிகை ஐஸ்வர்யா ராய் தான் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், அதனால் ஐஸ்வர்யா ராய் தவிர மற்றொரு ஹீரோயினாக நடிகை திரிஷாவையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவலும் சோசியல் மீடியாவில் காட்டுத்தீ போல் பரவி வருகின்றன.
நடிகைகள் ஐஸ்வர்யா ராயும், திரிஷாவும் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பொன்னியின் செல்வன் படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், திரிஷா குந்தவையாகவும் திறம்பட நடித்திருந்தார். அவர்கள் இருவரும் அஜித்தின் விடாமுயற்சி படத்திற்காக மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.