அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் விஜய்யின் வாரிசு திரைப்படமும் நேற்று பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இதில் துணிவு திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட்டது. அதேபோல் வாரிசு திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் ரிலீஸ் செய்தது. தமிழகத்தில் இரண்டு படங்களுக்குமே சமமான அளவில் தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன.
துணிவு படத்திற்கு நேற்று அதிகாலை 1 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதேபோல் விஜய்யின் வாரிசு படத்தின் சிறப்பு காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. இந்த இரண்டு படங்களுக்கும் அமோக வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் 25 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து உள்ளன.
கரூரை அடுத்த அரவக்குறிச்சியில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. அரவக்குறிச்சியில் ஒரே ஒரு திரையரங்கம் தான் உள்ளது. அங்கு அஜித்தின் துணிவு திரைப்படம் மட்டுமே திரையிடப்பட்டது. அப்படத்திற்கான அதிகாலை 1 மணி மற்றும் 4 மணிக் காட்சிகள் ஹவுஸ்புல் ஆக இருந்தபோதும், இதற்கு அடுத்ததாக திரையிடப்பட்ட 7 மணிக் காட்சிக்கு மொத்தம் 17 பேர் மட்டுமே டிக்கெட் வாங்கியுள்ளனர்.