சுமார் ஒன்பது வருடங்கள் கழித்து, விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படமும் அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படமும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதால்... இருதரப்பு ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு, நேற்று நள்ளிரவு முதலே இரண்டு படங்களையும் வரவேற்று வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில், நேற்று நள்ளிரவு முதலே அஜித் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கட்டவுட், பல லட்சம் செலவில் பேனர், தாரை தப்பட்டை மற்றும் பட்டாசு வெடித்து திருவிழாவை போல், இந்த படத்தை வரவேற்றனர்.
இப்படி வெறித்தனமாக ரசிகர்கள் படத்தை வரவேற்ற நிலையில், படம் வெளியான 24 மணி நேரத்திலேயே சமூக வலைதளத்தில் படம் வெளியாகி உள்ளதால் உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் பட குழுவினர்.
இதனை மீறி மீறும் விதமாக, தற்போது அஜித்தின் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் படம் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளேயே சமூக வலைதளத்தில், சட்ட விரோதமாக வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.