சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கிய படம் தான் துணிவு. அஜித் நாயகனாக நடித்திருந்த இப்படம் வங்கியில் நடக்கும் சுரண்டல்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. பொங்கலுக்கு ரிலீசான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசி உள்ளார் இயக்குனர் எச்.வினோத்.
ஷேர், ஜிஎஸ்டி, கமிஷன் என அந்த பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் நிறைய கணக்கீடுகள் இருக்கின்றன. இன்றைக்கு நிலவும் இந்த பாக்ஸ் ஆபிஸ் விளையாட்டுகளால் தயாரிப்பாளர்களே பொய் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அந்த ஆட்டத்தையெல்லாம் விட்டுவிடுவது நல்லது” என கூறினார்.
ரியல் வின்னர் மற்றும் பொங்கல் வின்னர் என துணிவு மற்றும் வாரிசு பட நிறுவனங்கள் வெளியிட்ட போஸ்டர்கள் குறித்து எச்.வினோத் பதிலளித்து பேசியதாவது : “இந்த பொங்கலைப் பொறுத்தவரை ரிலீஸுக்கு முன் நான் என்னுடைய பேட்டிகளில் ரெண்டுமே ஜெயிக்கனும், ஹாப்பி எண்டிங் இருக்கனும்னு நினைச்சேன் அது நடந்திருக்கிறது. எனக்கு வந்த தகவல்படி ரெண்டு படங்களுமே நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது” என பதிலளித்தார்.
இதையும் படியுங்கள்... அதற்குள் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள 'வாரிசு' திரைப்படம்? எப்போது... வெளியான ரிலீஸ் தேதி!