ஐஸ்வர்யா ராய் மகளுக்கே இப்படி நடந்த சும்மா விடுவார்களா? ஆராத்யா தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published : Apr 22, 2023, 04:25 PM IST

ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனின் ஒரே மகளான, ஆராத்யா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது டெல்லி உயர்நீதி மன்றம்.  

PREV
16
ஐஸ்வர்யா ராய் மகளுக்கே இப்படி நடந்த சும்மா விடுவார்களா? ஆராத்யா தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பாலிவுட் திரையுல நட்சத்திர தம்பதியான, ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனின் மகள், ஆராத்யா பச்சன், உடல்நிலை குறித்து போலியான செய்திகளை வெளியிட்டதற்காக யூடியூப் சேனல்களுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்ற அமர்வு விசாரணை செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
 

26

11 வயதே ஆகும் ஆராத்யா பச்சன், அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக... உண்மைக்கு புறம்பான வகையில் சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டது. இந்த வதந்திக்கு எதிராக ஆராத்யா, தன்னுடைய தாய் மற்றும் தந்தை உதவியுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னைப் பற்றி ஊடகங்களில் பொய்யான செய்திகளை வெளியிடுவதற்கு தடை கோரியும், தான் ஒரு மைனர் என்பதையும் தெரிவித்திருந்தார்.

நந்தினியின் சதியே காரணம்..! கமல் ஹாசனின் கர்ஜனை குரலில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' இன்ட்ரோ வீடியோ!
 

36

அதே போல் ஆராத்யா பற்றி தவறான தகவல்களை வெளியிட்டிருக்கும் "எல்லா வீடியோக்களையும் யூ டியூப் பக்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதி மன்றம், ஆராத்யா பற்றி அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டு யூ டியூப் தளத்தை முடக்க அதிரடியாக உத்தரவிட்டது.
 

46

மேலும் ஆராத்யா பச்சன் மிகவும் பிரபலமான குழந்தை என்பதால் அவர் அடிக்கடி ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் ஒருவராக இருந்து வருகிறார். இதன் காரணமாகவே சிலர், பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக இதுபோன்ற செய்திகளை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

ராதிகாவின் 'கிழக்கு வாசல்' தொடரில் இருந்து அதிரடியாக தூக்கப்பட்ட சஞ்சீவ்..! அவருக்கு பதில் இனி இந்த பிரபலமா?
 

56

கடந்த 2021 இல் பாப் பிஸ்வாஸ் விளம்பரங்களின் போது, ​​அபிஷேக் பச்சன் சமூக ஊடகங்களில் தனது மகளை தொடர்ந்து தாக்குபவர்களை கடுமையாக சாடினார். மகளை கேலி செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்று. நான் ஒரு பொது நபர், என்னை பற்றி விமர்சிக்கலாம், என் மகள் வரம்பிற்கு அப்பாற்பட்டவள். உனக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் வந்து என் முகத்துக்கு நேரே சொல்லு” என்று கோபமுடன் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

66

ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் 2007 இல் திருமணம் செய்து கொண்டனர். மேலும் அவர்களின் முதல் குழந்தையான மகள் ஆராத்யாவை 2011 இல் வரவேற்றனர். ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் மற்றும் ஆராத்யாவின் தாத்தாவும், மூத்த நடிகரான அமிதாப் பச்சன் இருவரும் சமூக ஊடகங்களில் அடிக்கடி தங்களின் பகிர்ந்து கொள்கிறார்கள். மும்பையில் உள்ள திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளி பள்ளியில் தற்போது ஆராத்யா படிக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது என்ன சிம்புவின் 'பத்து தல' படத்திற்கு வந்த சோதனை..! ரிலீசான ஒரே மாதத்தில் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Read more Photos on
click me!

Recommended Stories