தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவும், அவரது காதல் மனைவியும் நடிகையுமான சமந்தா ரூத் பிரபுவும் கடந்த அக்டோபர் 02 தேதி, இருவரும் ஒருமனதாக பிரிந்ததாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
சமந்தா - நாக சைதன்யா பிரிவுக்கு காரணம் என பல யுகங்கள் கிளப்பியது. குறிப்பாக சமந்தா தனது ஒப்பனையாளர் ப்ரீத்தம் என்பவருடன் நெருங்கி பழகி வருவதுதான் காரணம் என்றும், நடிப்பின் மீது மட்டுமே ஆர்வம் காட்டி வருவதால் அவர் ஒருபோதும் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றும், கருக்கலைப்புகள் செய்ததாகவும் கூறப்பட்டது.
இதுபோன்ற தவறான யுகங்களுக்கு சமந்தா தன்னுடைய அறிக்கை மூலம் பதில் அளித்தது மட்டும் இன்றி, தன்னை பற்றி அவதூறு பரப்பியவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுவரை தன்னுடைய விவாகரத்து குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனம் காத்து வந்த நாக சைதன்யாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதில் அவர் தனது கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். “நான் எல்லா வகையான பாத்திரங்களையும் தேர்வு செய்யும் போது அது ஒரு போதும், எனது குடும்பத்தையும், எங்கள் கௌரவத்தையும் பாதிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். எனது குடும்ப உறுப்பினர்களை சங்கடப்படுத்தும் வேடங்களில் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
இவர் கூறி இருக்கும் பதிலை வைத்து, சமந்தா திருமணத்திற்கு பிறகு... தொடர்ந்து சர்ச்சையான வேடங்களை தேர்வு செய்து நடித்தது தான் விவாகரத்துக்கு காரணமா? என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மேலும் இந்த பேட்டியின் மூலம் மறைமுகமாக சமந்தாவை சைதன்யா சாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. திருமண முறிவுக்கு பின்னர், சமந்தா புஷ்பா படத்தில் இடம்பெறும் ஐட்டம் பாடலான 'ஓ சொல்றியா மாமா' வேற லெவலுக்கு ரீச் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சமந்தா ஃபிலிம்ஃபேருக்கு அளித்த பேட்டியில், தனது விவாகரத்து பற்றி கூறினார். அதில் “உங்களுக்கு ஒரு மோசமான நாள் இருந்தால் பரவாயில்லை, குரல் கொடுங்கள், புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் எதையாவது கடந்து செல்கிறீர்கள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டவுடன், பாதி வேலை முடிந்தது… நான் இன்னும் என் வாழ்க்கையை வாழப் போகிறேன் என்று எனக்குத் தெரியும், மேலும் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நான் இப்போது எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களிலும், நான் எவ்வளவு வலிமையானவன் என்று ஆச்சரியப்பட்டேன்.
நான் மிகவும் பலவீனமானவள் என்று நினைத்தேன். இந்த விவாகரத்து முடிவால் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். ஆனால் நான் இவ்வளவு வலிமையானவனாக இருப்பேன் என நினைக்கவில்லை. இன்று நான் எவ்வளவு வலிமையாக இருக்கிறேன் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என தெரிவித்திருந்தார்". என்பது குறிப்பிடத்தக்கது.