அப்போ மகாலட்சுமி... இப்போ இவரா - திவ்யா ஸ்ரீதர் பிரச்சனைக்கும் காரணமாக இருந்த ஈஸ்வர்... வெளியான பகீர் தகவல்

First Published Oct 7, 2022, 3:27 PM IST

மகாலட்சுமி, திவ்யா ஸ்ரீதர் என சின்னத்திரை நடிகைகளின் பிரச்சனையில் ஈஸ்வரின் பெயரும் அடிபடுவது தொடர்கதை ஆகி வருகிறது.

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஈஸ்வர் ரகுநாதன். இவர் தொடர்ந்து சர்ச்சையிலும் சிக்கி வருகிறார். தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நடிகை திவ்யா ஸ்ரீதர் - அர்னவ் இடையேயான பிரச்சனைக்கு ஈஸ்வர் தான் காரணம் என்கிற பகீர் தகவலும் வெளியாகி உள்ளது.

நடிகர் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சீரியல் நடிகை மகாலட்சுமியுடன் தனது கணவர் நெருக்கமாக இருந்து வருவதாக புகார் தெரிவித்திருந்தார். கணவரை விவாகரத்து செய்த நடிகை மகாலட்சுமி தனது கணவரை அபகரிக்க முயல்வதாக ஜெயஸ்ரீ பரபரப்பி குற்றச்சாட்டை முன்வைத்தார். சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்தரை நடிகை மகாலட்சுமி இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால், அந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.

இதையும் படியுங்கள்... விஜய் தேவரகொண்டாவுடன் மாலத்தீவுக்கு சென்ற ராஷ்மிகா... வைரல் புகைப்படங்களால் மீண்டும் கிளம்பிய காதல் சர்ச்சை

இதனிடையே தற்போது மேலும் ஒரு நடிகையின் பிரச்சனையிலும் ஈஸ்வரின் பெயர் அடிபடுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செல்லம்மா சீரியல் நடிகர் அர்னவ்வை கேளடி கண்மணி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் காதலித்து பதிவு திருமணம் செய்துகொண்டார். இவர் தற்போது கர்ப்பமாகவும் உள்ளார். நேற்று திடீரென அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்ட திவ்யா, அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், இதனால் தனது வயிற்றில் உள்ள கரு கலைந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

திவ்யாவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அர்னவ், தங்களுக்குள் சாதாரணமாக நடக்கும் சண்டைகளை ஈஸ்வர் ஊதி பெரிதாக்கி விடுவதாகவும், எனக்கு நல்லது செய்வதாக கூறி தொடர்ந்து கெடுதல் செய்து வருவதாகவும், அவனுடன் இணைந்து தான் தனது மனைவி கருவை கலைக்க உள்ளதாக நாடகம் போடுவதாகவும் கூறினார். இவ்வாறு சின்னத்திரை நடிகைகளின் பிரச்சனையில் ஈஸ்வரின் பெயரும் அடிபடுவது தொடர்கதை ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்...  ‘வந்தியத்தேவன்’ கார்த்தி பாடிய குத்துப்பாட்டு கேட்க ரெடியா...! சர்தார் படத்தின் மாஸ் அப்டேட் வந்தாச்சு

click me!