நடிகை சமந்தா மயோசிடிஸ் என்கிற அரியவகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதற்காக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்ததாக சமீபத்தில் யசோதா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவர் கூறி கண்கலங்கினார். அப்படத்தின் டப்பிங்கை கூட அவர் மருத்துவமனையில் இருந்தபடி செய்த புகைப்படங்கள் வெளியாகியது.
24
இதனிடையே நேற்று நடிகை சமந்தாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நடிகை சமந்தா சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அவர் நலம்பெற வேண்டி ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் நடிகை சமந்தாவை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அது என்னவென்றால், அவர் நடிப்பில் கடந்த நவம்பர் 11-ந் தேதி திரையரங்கில் ரிலீசாகி வெற்றிபெற்ற யசோதா திரைப்படத்தை ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் வாடகைத் தாய் முறை பற்றி விவாதிக்கப்பட்டு இருந்தது.
44
இப்படம் முழுக்க ஐதராபாத்தில் உள்ள EVA என்கிற மருத்துவமனையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. அதில் தங்கள் மருத்துவமனையை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி அம்மருத்துவமனை நிர்வாகம் தொடுத்த வழக்கின் அடிப்படையில் தான் இப்படத்தை ஓடிடி ரிலீஸ் செய்ய தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்கள் நடிகை சமந்தாவை மட்டுமின்றி அவரது ரசிகர்களையும் அப்செட் ஆக்கி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.